2000
புத்தாயிரத்தில் புதுப் பாரதம்!
புத்தாயிரம் ஆண்டு பொலிவாயிரம் சேர்க்கட்டும்!
புத்தாயிரம் ஆண்டு புகழ் கோடி சேர்க்கட்டும்!—ஆண்டு
பத்தாயிரம் ஆனாலும் பாரதம் பாரதம்தான் எனப்
பறை சாற்றிச் சொல்லட்டும், அகிலமெல்லாம் வெல்லட்டும்.!
வெற்றாயிரம் சமர் செய்வதை விட்டுவிட்டு
பெற்றாயிரம் பெருமைகள் சேர்க்கட்டும்!
கற்றாயிரம் கலைகள் கனிவோடு சேர்க்கட்டும்!
கணிப்பொறி உலகில் கம்பீரம் காட்டட்டும்!
செத்தாயிரம் பேர்தந்த சொந்த நாட்டை
சொத்தாயிரம் எனப் பேணிச் சுதந்திரம் காத்திடுவோம்!
விண்ணாயிரம் வென்றிடவே
வெற்றிகள் பெற்றிடவே
கண்ணாயிரம் தந்தவளே!
கண்மணியே பாரதமே!
பெண்மணியே பேரணங்கே!
பெற்றவளே பேரரசி
உண்மையுடன் போற்றுகிறோம்!
உனை நாங்கள் வணங்குகிறோம்.!
Sunday, January 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment