இதுவேண்டும் அதுவேண்டும் என்று
இறைவனை நான்கேட்க மாட்டேன்!
பொருள்வேண்டும் புகழ்வேண்டும்
எனக்கேட்டால் பேராசை!
அருள்வேண்டும் எனக் கேட்டால்
அதுவும் ஆசை!
எதுவந்த போதும்
அதையே அப்படியே
ஏற்றுக் கொள்ளும்
மதிவேண்டும்...நிம்
மதி வேண்டும்....
இதுவொன்றே வேண்டும், எனினும்,
அதுகூடக் கேட்க மாட்டேன்
ஏனெனில்,
இறையிடம் இறைஞ்சும் பொருளெல்லாம் இறைஞ்சும் நேரம் கிடைப்பதில்லை!
இறைக்கே தெரியும்
யாருக்கு எப்போது
தரவேண்டும் என்பதால் !
இறையே வேண்டுமென்பேன்.
கிடைப்பதில் நிம்மதி!
கொள்வதே நிம்மதி!
வைரமணி
சென்னை
Wednesday, July 14, 2021
எது வேண்டும்…..?
Subscribe to:
Posts (Atom)
