
கண்மணி அறிவாள் விடையை!
உன் கண் மணி கண்ணின் மணி
மட்டுமே அறிவாள் விடையை
உன் கண்ணின் கருமணி
கவிதைக்குள் சிறக்கும் மணி
அறிவாள் விடையை!
********
கண்மணி சொல்வது
கேட்க கருமணி தேடினேன்!
உதடுகள் சொல்வது
பொய்யென்று எண்ணியே உண்மை தேடிட
உன் கண்களைத் தேடினேன்!
அதன் கருமணி நாடினேன்!
