Wednesday, July 14, 2021

எது வேண்டும்…..?


எது வேண்டும்?



இதுவேண்டும் அதுவேண்டும் என்று
இறைவனை நான்கேட்க மாட்டேன்!

பொருள்வேண்டும் புகழ்வேண்டும்
எனக்கேட்டால் பேராசை!
அருள்வேண்டும் எனக் கேட்டால்
அதுவும் ஆசை!

எதுவந்த போதும்
அதையே அப்படியே
ஏற்றுக் கொள்ளும்
மதிவேண்டும்...நிம்
மதி வேண்டும்....
இதுவொன்றே வேண்டும்,  எனினும்,
அதுகூடக் கேட்க மாட்டேன்
ஏனெனில், 
இறையிடம் இறைஞ்சும் பொருளெல்லாம்   இறைஞ்சும் நேரம் கிடைப்பதில்லை!
இறைக்கே தெரியும்
யாருக்கு எப்போது
தரவேண்டும் என்பதால் !
இறையே வேண்டுமென்பேன். 

கிடைப்பதில் நிம்மதி!
கொள்வதே நிம்மதி!


வைரமணி
சென்னை

Wednesday, August 8, 2018

முக நூல்






















முக நூல்: (1)
முகவரி என்றாலும் அதற்கு 
முகமொன்றும் இருப்பதில்லை!
வரிகளும் இருப்பதில்லை!

வரிகளாய் மட்டும் 
வரைவதாலே முகவரிஎன்றானது
மின்னஞ்சல் முகவரிகள் வந்த பின்பு
முகம் காட்ட வழி தேடி வந்ததே 
முகப்புத்தகம் எங்கள் 
முகப் புத்தகம்
முகவரி காட்டும் 
முகநூல்!
முகவரிகளை மட்டுமின்றி 
முகங்களையும் இணைக்கும் 
முதல் நூல் என்பதே
முகநூல்எங்கள் முகநூல்!
முகங்களின்  கோர்வை 
என்பதால் முகப்புத்தகம் 
என்று பேரிட்டனரோ?

முக நூல்: (2)
முகவரிகளும் முகங்களும்
முகப்புத்தகத்தில் சங்கமம்..
முகங்களை முகப் புத்தகத்திலே
முழுவதும் பார்த்துக் கொள்வதால்……………..
நேருக்கு நேர் 
முகம் பார்க்கத் தேவை இருக்காதோ
 இனி வரும் காலத்தில்?????????!! 
முக நூல்: (3).                                                     
நேரில் பார்க்கையில்
நேரும் முக பாவங்கள்
அதுகாட்டும்  தாபங்கள்

ஆயிரம் தாக்கங்கள்
முகப் புத்தகத்தில் காண முடியாதே!
நேரில் பார்ப்பதால் நேரும் உணர்வுகள்
முகப் புத்தகத்தால் நிகழ்த்த முடியாதே?
நிஜம் என்றுமே நிழலிடம் தோற்க முடியாதே?

முக நூல்: (4).                                                
நிஜமே! நிஜமே
நிழல் என்றும்
நிஜமாகாது
நிழல் தரும் சுகமே நிலையன்று
நிஜம் மறந்து நிழலின் பின்னால் நித்தம் ஓடும்!
நித்தில மாந்தருக்கு 
நிழலோடு நிஜத்தையும் உணரும் 
மதிஅருள்வாய் நீல வண்ணக் கண்ணா!!   











































Tuesday, November 26, 2013

படிகள்#  


 
















ஏறி வந்த படிகளை எண்ணி எண்ணி
எடுத்து வைத்த அடிகளை எண்ணி எண்ணி
தேடி வைத்த செல்வத்தை எண்ணி எண்ணி
கூடி வந்த சொந்தத்தை
எண்ணி எண்ணி
மூடி வைத்த எண்ணத்தை
எண்ணி எண்ணி
முடியாத கனவுகளை
எண்ணி எண்ணி
விடியாத இரவுகளை எண்ணி எண்ணி
புரியாத உலகத்தை
எண்ணி என்ணி
குடிக்கக் கையில்
கோப்பை கொண்டு
படிமேல் அமர்ந்து
பானம் பருகையில்
பரவசம் பெருகிட
...                                                                                                                         ......                                                                                                                                                                                                                                            ......
......                                                                                                                 ...........
..........                                                                                                           .............
..............                                                                                                   ................
...................                                                                                       .......................

பரவசம் பெருகிட ......
ஏறி வந்த படிகளை எண்ணி எண்ணி......


                                                                    @#####@




Tuesday, October 15, 2013


உடல் மொழி #
 
மடல் வழி சொல்வதினும் 
உடல் வழி சொல்வதே
உண்மை மொழி !
உடல் மொழி சொல்லும்
உண்மை மொழி!
உலகத்தில் அதுவே
தனி மொழி !.
கண்கள் சொல்வது
உண்மை மட்டுமே,
எள்ளளவும் பொய்யில்லை
உள்ளம் உள்ளுவதை
உள்ளபடி சொல்வதாலே,
கண்கள் சொல்வது
உண்மை மட்டுமே!
 
கைகளும் விரல்களும்
கதைகள் சொல்லாது,
மெய்களை மட்டுமே
மென்மையாய்ச்
சொல்லி இருக்கும்!
 
பாதங்களும் கால்களும் நடைபோடும்
பாதைகளைக்
காட்டி விடுமே
நவின்றிடும் உண்மையை
நாசூக்காக
இருப்பதுவும் இசைவதுவும்
நடப்பதுவும்
நயமாக நவில்வதுவும்
நம்மொழி கூறிடுமே
உடல்மொழி பேசிடுமே!
                   $$$$

துரைராஜ்- மீனாட்சி

17-09-2013

துரைராஜ்! மீனாட்சி !
 
அருவியூர் தொட்டு
அம்மன்குறிச்சி கண்ட
அருமைமிகு அன்பரே
தருமமிகு நண்பரே
துரைராஜரே!

அறுபது ஆண்டு கண்ட
அருமைமிகு நண்பரே
மணிவிழாக் காணும்
மணியான நண்பரே!
துரைராஜரே!                                                               
என்றும் கலகலப்பு
எப்போதும் கிண்கிணிப்பு                                            
பொன்னாச்சி மீனாட்சி                       
எனையாட்சி செய்யட்டும்                                           
மனையாட்சி செய்யட்டும்!
.........
                                                                                
எம் வாழ்வு சிறப்பூட்டி
எனையாளு மீனாட்சி
என்று திருப்பூட்டி
அம்மன்குறிச்சி அழைத்து
வந்து அன்பாக
இல்லறம் தொடங்கி
அருமையாக அழகாக
அரவிந்தன் ,ஆனந்தன்
இருவர் பெற்று
அவர்தம் கல்வி
அனைத்தும் தந்து
அவர்க்கும் முறையாக இல்லத்தரசியராய்
நல்வாழ்வு வாழ
பத்மா கண்மணி
தேடித்தந்து பேரன்புப்
பேத்தியாய்
பிரகதியின்
அன்பும் பெற்றோரே !

பத்துப் பத்தாக
பல நூறாண்டு
கண்டு வாழ
ஆண்டு வாழ
அன்போடு வாழ்த்துக்கள் .    

 

Thursday, April 5, 2012

பெண்ணாய்ப் பிறந்தாய் பூமிக்கே பெருமை சேர்த்தாய் !!


மகளிர் தின வாழ்த்துக்கள்!

பெண்ணாய்ப் பிறந்ததால்
பூமிக்கே பெருமை சேர்த்தாய்-
பொறுமை அதிகம் கொண்டு!
பிறப்பென்று எமக்குணர்த்த
அருந்தாயாய் அவதரித்தாய் !
கண்ணும் கருத்துமாய்
கவனம் கொள்வாய்!

அருமை மகளாய் ,
கலகலக்கும் தோழிகளாய்,
அன்புக் காதலியாய்,
பேரன்பு மனையாளாய்!
பெருமை கொள் தாயாய்ப்
பூமிக்கே பெருமை சேர்ப்பாய்
பெண்ணாய்ப் பிறந்ததாலே!
பெண்மையே உனக்கு வணக்கம்!

&&&&&&&&&&&&&&




Sunday, December 25, 2011



அன்னை தெரசே!!!!!!!!!!
மாதரசே! மா தெரசே!

அன்பிதயம் கொண்ட தாயே
ஆதலாலே அன்னை யானாய்!
அன்பிதயம் படைத்த தாயே!
ஆதலாலே அன்னை யானாய்!
அன்பிலிதயம் நனத்த தாயே
ஆதலாலே அன்னை யானாய்!
$$$$$$$$$$
மாதபசி! மா(தெ)தரசே!

அன்பால் உலகை அணைத்த தாயே!
உன்பால் வந்தோர் மக்கள் கோடி!
உன்பால் வந்தோர் மட்டும் இன்றி
நட்பால் அனைவரும் காத்தாய் தேடி!
$$$$$$$$$$
மாதரசே! மா தெரசே!
மூதரசி! மாதரசே!
வெண்பால் உடையில் மக்கள் நடுவே
பண்பால் பரிவால் சேவை செய்தாய்!
கண்போல் காத்தாய் நலிந்தோர் தம்மை
தெம்பால் வாழ்ந்தது எங்கள் கூட்டம்!
பெண்பால் சிறக்க வந்த தாயே!
உன்போல் ஒருவரில்(லை) உலகில் தாயே!
$$$$$$$$$$$$$$
"மூளையின் சுருக்கம்"
"அறிவின் ஆழம்"
என்பது விஞ்ஞானம்!
உன்................................
"முகத்தின் சுருக்கமோ"
"உழைப்பின் ஆழம்"
என்பது நம் ஞானம்!
$$$$$$$$$$$$
அன்னை மேரிக்கு
அன்பு மேரிக்கு
வந்த மகன் யேசுதானே!
அற்புதன் யேசுதானே!

அந்த மேரிக்கு
அன்பு மேரிக்கு
வந்த மகள் நீதானே!
அன்னை தெரசு நீதானே!
நெஞ்சமெல்லாம் நீதானே!
நெஞ்சமெல்லாம் தெரசுதானே!!!!!

$$$$$$$$$$$$$