Tuesday, October 15, 2013

துரைராஜ்- மீனாட்சி

17-09-2013

துரைராஜ்! மீனாட்சி !
 
அருவியூர் தொட்டு
அம்மன்குறிச்சி கண்ட
அருமைமிகு அன்பரே
தருமமிகு நண்பரே
துரைராஜரே!

அறுபது ஆண்டு கண்ட
அருமைமிகு நண்பரே
மணிவிழாக் காணும்
மணியான நண்பரே!
துரைராஜரே!                                                               
என்றும் கலகலப்பு
எப்போதும் கிண்கிணிப்பு                                            
பொன்னாச்சி மீனாட்சி                       
எனையாட்சி செய்யட்டும்                                           
மனையாட்சி செய்யட்டும்!
.........
                                                                                
எம் வாழ்வு சிறப்பூட்டி
எனையாளு மீனாட்சி
என்று திருப்பூட்டி
அம்மன்குறிச்சி அழைத்து
வந்து அன்பாக
இல்லறம் தொடங்கி
அருமையாக அழகாக
அரவிந்தன் ,ஆனந்தன்
இருவர் பெற்று
அவர்தம் கல்வி
அனைத்தும் தந்து
அவர்க்கும் முறையாக இல்லத்தரசியராய்
நல்வாழ்வு வாழ
பத்மா கண்மணி
தேடித்தந்து பேரன்புப்
பேத்தியாய்
பிரகதியின்
அன்பும் பெற்றோரே !

பத்துப் பத்தாக
பல நூறாண்டு
கண்டு வாழ
ஆண்டு வாழ
அன்போடு வாழ்த்துக்கள் .    

 

No comments: