Thursday, October 9, 2008

அன்பிற்கும் பஞ்சம் உண்டோ?

09-12-1976


உண்டோ இன்பம்?

அன்பிற்கும் பஞ்சம் உண்டோ?
அதைவிட இன்பம் உண்டோ?

அன்பிற்குப் பஞ்சம் உண்டோ?
அணைத்திட அன்னை, உண்டாம்!

துன்பத்திற் கிடமே யில்லை!
சுற்றிலும் நண்பர் கொண்டால்!

கண்மணி மனைவி மக்கள்
கருத்துடன் இருந்து விட்டால்

அன்பிற்கும் பஞ்சம் உண்டோ?
அதைவிட இன்பம் உண்டோ?

12-11-1976
நரேந்திரன்:
விவேகானந்தன்………….

அலை கடலுள் அமைதிக் கடல்!
ஆழ் கடலுள் நல்ல முத்து!
நிலையில்லா நெஞ்சத்துள்
தலையாய தன்னுறுதி!
விலையில்லா மாணிக்கமே!
விவேகமே! ஆனந்தமே!
மலையென்று உயர்ந்திடுமே!
மணியென்று ஒளிர்ந்திடுமே!!