Wednesday, April 11, 2007

வைரமணி கவிதை-- மென்பொருளே.(பெண்ணினம்.. Software..)









மென்பொருளே மென்பொருளே...


மெய்யான என்பொருளே!(பெண்ணினம்.. Software..)








மென்பொருளே மென்பொருளே...


மெய்யான என்பொருளே!


வன்பொருளாம் எனக்குள்ளே


மென்பொருளாய் வந்தவளே!





வடிவற்ற எனக்குவடிவம் தந்தவளே!


உயிரற்ற எனக்கு உயிரைத் தந்தவளே!


முச்சுக் காற்றாகிமுகவரி தந்தவளே!


"பேச்சு" க் கொடுத்துபெருமை சேர்த்தவளே!





உயிர் நீராய் உடலுக்குள் ஓடி


உயிர் தந்தவளே!


மெய்யான என்பொருளே!


மெய்யாலும் மெய் வளர்த்தவளே!


முக்கியான மென்பொருளே!


என் சகியே


உனக்கென் வணக்கம்>>>>





மடப் பெண்ணே!


நீயின்றி நானொரு"ஜடப்" பொருளே!


நானின்றி நீயொரு"மடப்" பொருளே!