Sunday, December 14, 2008



09-01-1977
உழைப்பெனும் வேதம்
ஒலித்திடும் காட்சி!

அமைதியில் ஆதவன் படகு விட்டு
அழகினை ஒளியினை அள்ளிச் சிந்த,
இமைகளைத் தாக்கிய தூக்கம் சாக
எழுந்தவர் உழைப்பெனும் வேதம் பாட,
இனிமையில் சோகத்தை மறந்து கொஞ்ஞம்
இனிவரும் இன்பத்தை அள்ள எண்ணித்
தனிமையில் மீனவர் படகு விட்டு,
“தங்கத்தை” அள்ளிட விரையுங் காட்சி!


&&&&&&&

வருக வருக தேவி நீ!




வருக வருக தேவி நீ!

வருக வருக தேவி நீ!
கார்த்திகை மழையே போல
கன்னி நீ வரவே வேண்டும்!
மார்கழிப் பனியே போல
மங்கை நீ வரவே வேண்டும்!
சித்திரைக் கோடை போல
சீரியள் வரவே வேண்டும்!
…………………………..
…………………………..
காலங்கள் சிறக்க என்றும்
காரிகை வருக மாதே!

**********

Thursday, October 9, 2008

அன்பிற்கும் பஞ்சம் உண்டோ?

09-12-1976


உண்டோ இன்பம்?

அன்பிற்கும் பஞ்சம் உண்டோ?
அதைவிட இன்பம் உண்டோ?

அன்பிற்குப் பஞ்சம் உண்டோ?
அணைத்திட அன்னை, உண்டாம்!

துன்பத்திற் கிடமே யில்லை!
சுற்றிலும் நண்பர் கொண்டால்!

கண்மணி மனைவி மக்கள்
கருத்துடன் இருந்து விட்டால்

அன்பிற்கும் பஞ்சம் உண்டோ?
அதைவிட இன்பம் உண்டோ?

12-11-1976
நரேந்திரன்:
விவேகானந்தன்………….

அலை கடலுள் அமைதிக் கடல்!
ஆழ் கடலுள் நல்ல முத்து!
நிலையில்லா நெஞ்சத்துள்
தலையாய தன்னுறுதி!
விலையில்லா மாணிக்கமே!
விவேகமே! ஆனந்தமே!
மலையென்று உயர்ந்திடுமே!
மணியென்று ஒளிர்ந்திடுமே!!

Wednesday, September 3, 2008


விமானம்:-

உலகம் சுற்றும் உலோகப் பறவை!
விண்ணில் பறக்கும் எந்திரப் பறவை!
மூக்கு நீண்ட முத்திரைப் பறவை!
அசைக்கா இறகிலும் அத்தனை சக்தி!
எளிதாய்ப் பறந்திடும்
எத்தனை பேருடன்!
எத்தனை எடையுடன்!
மலை தாண்டும், மடுதாண்டும்!
அலை கடல் ஆயிரம் தாண்டும்!
ஊர் நிலம் நீர் எளிதாய்த் தாண்டும்!
உயரப் பறந்து உலகை அளந்திடும்
உலகம் சுற்றும் உலோகப் பறவை.
இறகுக்குள் பொதிந்து
தன் குஞ்சுகளைக் காப்பபது போல்
உடலுக்குள் எமை வைத்து
வெயில் மழை படாமல் காக்கும்
விண்ணின் பறவையே!
உந்தித் தாவும் கால்களாய்
உன் சக்கரங்கள்!
விண்ணின் பறவையே!
மண்ணின் மைந்தன் கண்ட
விண்ணின் பறவையே!
நீ தான்
விந்தைப் பறவையே!

Monday, June 9, 2008

கண்மணி அறிவாள் விடையை!














கண்மணி அறிவாள் விடையை!

உன் கண் மணி கண்ணின் மணி
மட்டுமே அறிவாள் விடையை
உன் கண்ணின் கருமணி
கவிதைக்குள் சிறக்கும் மணி
அறிவாள் விடையை!
********

கண்மணி சொல்வது
கேட்க கருமணி தேடினேன்!
உதடுகள் சொல்வது
பொய்யென்று எண்ணியே உண்மை தேடிட
உன் கண்களைத் தேடினேன்!
அதன் கருமணி நாடினேன்
!

Sunday, June 8, 2008

பொய் எது??


பொய் எது??
உதடுகள் சொல்வது பொய்யா?
உன் உள்ளம் சொல்வது பொய்யா?
நினைவில் நின்று நித்திரை கெடுப்பதும்,
கனவில் வந்து கற்பனை வளர்ப்பதும்
கண்மணி நீ என்று
காதல் கொண்ட
உன் உதடுகள் சொல்வது பொய்யா?
உன் உள்ளம் சொல்வது பொய்யா?