Sunday, December 25, 2011



அன்னை தெரசே!!!!!!!!!!
மாதரசே! மா தெரசே!

அன்பிதயம் கொண்ட தாயே
ஆதலாலே அன்னை யானாய்!
அன்பிதயம் படைத்த தாயே!
ஆதலாலே அன்னை யானாய்!
அன்பிலிதயம் நனத்த தாயே
ஆதலாலே அன்னை யானாய்!
$$$$$$$$$$
மாதபசி! மா(தெ)தரசே!

அன்பால் உலகை அணைத்த தாயே!
உன்பால் வந்தோர் மக்கள் கோடி!
உன்பால் வந்தோர் மட்டும் இன்றி
நட்பால் அனைவரும் காத்தாய் தேடி!
$$$$$$$$$$
மாதரசே! மா தெரசே!
மூதரசி! மாதரசே!
வெண்பால் உடையில் மக்கள் நடுவே
பண்பால் பரிவால் சேவை செய்தாய்!
கண்போல் காத்தாய் நலிந்தோர் தம்மை
தெம்பால் வாழ்ந்தது எங்கள் கூட்டம்!
பெண்பால் சிறக்க வந்த தாயே!
உன்போல் ஒருவரில்(லை) உலகில் தாயே!
$$$$$$$$$$$$$$
"மூளையின் சுருக்கம்"
"அறிவின் ஆழம்"
என்பது விஞ்ஞானம்!
உன்................................
"முகத்தின் சுருக்கமோ"
"உழைப்பின் ஆழம்"
என்பது நம் ஞானம்!
$$$$$$$$$$$$
அன்னை மேரிக்கு
அன்பு மேரிக்கு
வந்த மகன் யேசுதானே!
அற்புதன் யேசுதானே!

அந்த மேரிக்கு
அன்பு மேரிக்கு
வந்த மகள் நீதானே!
அன்னை தெரசு நீதானே!
நெஞ்சமெல்லாம் நீதானே!
நெஞ்சமெல்லாம் தெரசுதானே!!!!!

$$$$$$$$$$$$$







No comments: